இந்தோனேஷியாவில் இன்று அதிகாலையில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியா நாட்டின் மொலுக்கா கடல் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் உருவாக்கியது.
வடக்கு சுலவேசி பகுதியில் கட்டடங்கள் இடிந்தன. மேலும் சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தோடு தொடர்புடையதாக ஒரு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடல் அலைகள் 75 செ.மீ. (2.5 அடி) வரை உயர்ந்ததாக கூறப்பட்டது.அதோடு சுனாமி அலைகள் உருவானதாக இந்தோனேசிய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவின் பல பகுதிகளிலிருந்து வரும் சிசிடிவி காணொளிகளில் கட்டிடங்கள் கடுமையாக நடுங்கும் காட்சி பதிவு செய்யப்பட்டது.இதனால் மக்கள் பாதுகாப்பாக வெளியேறினர்.
பல பகுதிகள் சேதமடைந்து, சில இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் உருவாகி உள்ளது. நார்த் சுலாவேசி மாநிலத்தின் மனாடோ நகரில் ஒரு கட்டிடம் விழுந்த போது ஒருவர் உயிரிழந்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நார்த் சுலாவேசியாவின் கடலோர நகரமான பிடுங் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டதாக இந்தோனேஷியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்தது.
ஹவாய் ஆஸ்தியனில் அமைந்த பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) முதலில், நிலநடுக்க மையத்திற்கு 1,000 கிலோமீட்டர் (621 மைல்கள்) சுற்றளவில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா கடலோரங்களில் ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்தது.
நிலநடுக்கத்துக்கு அரை மணி நேரத்திற்குள் நார்த் மினாஹசாவில் 75 செ.மீ., பிடுங் நகரில் 20 செ.மீ. உயர்ந்த அலைகள் பதிவானதாக இந்தோனேஷியாவின் BMKG புவியியல் நிறுவனம் தெரிவித்தது.
கடந்த நவம்பர் மாதம், இந்தோனேஷியாவின் சுமாத்திரா தீவிலான 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

