தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று தொடக்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இக்கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவெக முதல் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
- மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்.
- பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது.
- இருமொழிக் கொள்கையில் உறுதி.
- நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தேவையில்லை.
- மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
- பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.
- சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான கையாலாகாத திமுக அரசுக்கு கண்டனம்.
- டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- சமூக நீதியை நிலை நிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.
- இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு.
- பன்னாட்டு அரங்கிற்கு தந்தை பெரியார் பெயரை சூட்டுக.
- கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்.
- தலைவருக்கே முழு அதிகாரம்.
- கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
- கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல்வீரர்களுக்கு இரங்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது .