Site icon ITamilTv

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 300 பேர் உயிரிழப்பு..!!

Afghanistan floods

Afghanistan floods

Spread the love

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி ( Afghanistan floods ) தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . இந்த வெள்ளத்தால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து துவைத்து வருகின்றனர்.

Also Read : வனப்பகுதி மக்கள் மீது வனத்துறையினர் தாக்குதல் – இபிஎஸ் கண்டனம்

இதுமட்டுமின்றி இந்த பேரிடரில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது . காபூல், பஹ்லான் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது .

மேலும் இந்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் நிவாரணப் பணி ( Afghanistan floods ) தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது .


Spread the love
Exit mobile version