பீகாரில், பள்ளி ஒன்றில் மாணவியை நான்கு சிறுவர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்த நிலையில், அங்கு வந்த தலைமை ஆசிரியரும் (headmaster) மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், கைமூர் மாவட்டத்தில் 14 வயது மாணவி ஒருவர் கழிப்பறையை பயன்படுத்த காட்டு பகுதிக்கு சென்றபோது, அங்கிருந்த நான்கு இளம் வயது சிறுவர்கள் அந்த மாணவியை தூக்கிச் சென்றுள்ளனர்.
பின்னர், அடர்த்தியான காட்டு பகுதிக்குள் கொண்டு சென்று அங்கே மாணவியை கட்டி வைத்துள்ளனர். பிறகு, அந்த மாணவர்கள் மாறி மாறி அந்த மாணவியை பலாத்காரம் செய்த நிலையில், சிறுமி உதவி கேட்டு கூச்சலிட்டு கத்தியுள்ளார்.
ஆனால், அங்கு யாரும் இல்லாததால் சிறுமிக்கு உதவ யாரும் வரவில்லை. இந்நிலையில் நான்கு சிறுவர்களில் கடைசி சிறுவன் வன்புணர்வு செய்யும் போது அங்கு அப்பகுதி பள்ளி தலைமை ஆசிரியர் சுரேந்திர குமார் பாஸ்கர் வந்துள்ளார்.
கழிப்பறைக்கு செல்வதற்காக அங்கே வந்த தலைமை ஆசிரியர் சுரேந்திர குமார் பாஸ்கர் மாணவியின் அலறல் கேட்டு அவர்களை நோக்கி வந்துள்ளார்.
அப்போது, மாணவியை சிறுவர்கள் பலாத்காரம் செய்வதை கண்டு வேகமாக ஓடி வந்துள்ளார். அவர் வருவதை பார்த்து 4 சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, ஆடையின்றி கிடந்த மாணவியை பார்த்ததும் சபலமடைந்த தலைமை ஆசிரியர் சுரேந்திர குமார் பாஸ்கரும், அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், அவர் மாணவியை கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்த நிலையில், அந்த மாணவியை ரத்தம் வடிய வடிய அதே காட்டுப்பகுதியில் விட்டு சென்று விட்டார்.
பின்னர், நீண்ட நேரத்திற்கு பின் சுயநினைவு பெற்ற அந்த மாணவி அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, மாணவின் பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது புகார் அளித்தனர்.
மேலும், அந்த தலைமை ஆசிரியர் மீதும் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, தலைமை ஆசிரியர் (headmaster) சுரேந்திர குமார் பாஸ்கர் தலைமறைவாகி உள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.