மதுரையில் இன்று செய்தியாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது :
உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 12 பேரை நியமன செய்ய உள்ளனர். அனைத்து பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களை சார்ந்தவர்களையும் நியமிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் உள்ள பிறமலைக்கள்ளர், அருந்ததியர், மறவர், ஆதிதிராவிடர் சமுதாயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நீதிமன்ற நியமனங்களில் இல்லை என்ற முறை உள்ளது.
இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உரிய நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சரை சந்தித்து நீதிபதிகள் முறையிட்டுள்ளார்கள்.
சமூக நீதியை பின்பற்றுவதற்கு உரிய வழிகாட்டுதல்களை அரசும் சட்டத்துறையும் வழங்க வேண்டும். மத நல்லிணக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி அளிக்காதது அதிர்ச்சியை அளிக்கிறது.
Also Read : உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி – உருக்கமான வீடியோ வெளியிட்ட ஜெலென்ஸ்கி..!!
திமுக கூட்டணியில் எந்த சலலப்பும் இல்லை. கருத்து முரண்கள் இருந்தாலும் கூட கட்டுக்கோப்பாக ஒற்றுமையோடு இருக்கின்றோம் என்பதுதான் அவர்களுக்கு உள்ள சிக்கல். இல்லாதது பொல்லாததை இட்டுக்கட்டி பேசுகிறார்கள். மற்றபடி அதில் சொல்வதற்கு எதுவும் இல்லை.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டே வெளிப்படையாக தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராடி வருகிறோம். திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை. திமுக கூட்டணியில் விசிகவும் ஒரு அங்கம். திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் பங்கு உள்ளது. அதேபோல அதை காப்பாற்றுவதற்கான பொறுப்பும் விசிகவுக்கு உள்ளது. அனைத்து பொறுப்புகளையும் ஏற்று செயல்படக்கூடிய கட்சியாகத்தான் விசிக உள்ளது.எந்த இடத்திலும் பலவீனப்படவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.