ITamilTv

அண்ணா நகரில் பரபரப்பு -5 மாடி கட்டிடத்தில் திடீரென பற்றிய தீ

a fire broke out in a 5 storey building near saravana bhavan in anna nagar

Spread the love

சென்னை அண்ணா நகர் 5வது அவென்யூ, சரவணபவன் அருகே 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தின் தரை தளத்தில் தனியார் வங்கியும் மற்ற தளங்களில் பல ஐடி நிறுவனங்களும், தனியார் நிறுவங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று தரைத்தளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

a-fire-broke-out-in-a-5-storey-building-near-saravana-bhavan-in-anna-nagar
a fire broke out in a 5 storey building near saravana bhavan in anna nagar

கட்டத்தில் பரவிய தீ நீண்ட போராட்டத்துக்கு பிறகு அணைக்கப்பட்டு தீ விபத்தில் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இது குறித்து தெரிவித்த தீயணைப்பு துறையினர், கீழ் தளத்தில் உள்ள வங்கியில் இருந்து தீ பற்றியதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக, மின் கசிவு மூலமாக, தீ பரவியிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Spread the love
Exit mobile version