‘தேவராட்டம்’ படத்தின் மூலமாக நடிகர் கெளதம் கார்த்திக் கதாநாயகனாகவும், நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடித்தனர். வெள்ளித் திரையில் ஜோடியாக சேர்ந்து நடித்த இவர்கள், அந்த படத்தின் வெளியீட்டுக்கு பின்னர், காதலிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் சமீபத்தில், சமூக வலைதளத்தின் ஊடாக தங்களின் காதலை ரசிகர்களுக்கு உறுதி செய்தனர். தேவராட்டம் படத்தில் நடித்த போது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும், கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்தே தாங்கள் காதலித்தாகவும் தங்களது காதல் குறித்து நடிகர் கெளதம் கார்த்திக், தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் ஜோடிகள் தங்களின் திருமணத்திற்கான தேதியையும் அறிவித்தனர். அதன்படி நடிகர் கெளதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன் ஜோடிகளின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. அவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டார்கள். வரவேற்பு நிகழ்ச்சி எதுவும் நடைப்பெறாமல், குடும்ப விழாவாக திருமணம் நடைப்பெற்றது.
‘தேவராட்டம் படத்தினை தொடர்ந்து காதலித்து வந்த, நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஜோடி இன்று திருமணத்தில் இணைந்து கொண்டதை அடுத்து திரைப்பிரபலங்கள், நண்பர்கள், ரசிகரிகள் என பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.