இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி என பல நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.இவர்களின் நடிப்பை ரஜினி கமல் ஆகியோர் இன்னும் பாராட்டவில்லையா என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில்,நடிகர் கமல் ஐமேக்ஸ் திரையரங்கில் நடிகர் விக்ரம் மற்றும் கார்த்தியுடன் இணைந்து திரைப்படத்தை பார்த்துவிட்டு அங்கேயே இவர்களை பாராட்டி சென்றார்.மேலும் நடிகர் ரஜினி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்துவிட்டு போன் காலில் அனைவருக்கும் கால் செய்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினி பாராட்டு எங்கே என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு “அவர் பாராட்டு எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது” என ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டு ரஜினியின் பாராட்டை ரசிகர்களிடம் தெரிவித்தார். மேலும் நடிகர் கார்த்தி,கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினி இருவரும் பாராட்டு தெரிவித்ததற்கு நன்றியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில்,கமல்ஹாசன் அவர்கள் மிகப்பெரிய மிகப்பெரிய சாதனையை செய்ய முன்னுதாரணமாக இருக்கிறார் என்றும் மற்றவர்களை எப்படி மதிக்க வேண்டும் அதை எப்படி வெளி காட்ட வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் ரஜினி அவர்கள் போன் செய்தது மிகவும் ஸ்பெஷலான ஒன்று எனவும் நீங்கள் யாரையும் பாராட்டு தெரிவித்து மகிழ்விப்பதில் தவறுவதில்லை என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி தெரிவித்துள்ளார்.நடிகர் கார்த்தி அடுத்தடுத்து கமல்ஹாசன் மற்றும் ரஜினி அவர்களுக்கு ஒன்று சேர ட்விட்டர் பக்கத்தில் நன்றியினை தெரிவித்த நிலையில் முதலில் கமல்ஹாசனின் பெயரையும் பின்னர் ரஜினியின் பெயரையும் குறிப்பிட்டாதால் அங்கேயும் ரசிகர்கள் ரஜினி கமல் சண்டையை ஆரம்பித்துவிட்டனர்.ஆனால் இதற்கு சற்றும் செவி சாய்க்காத கார்த்தி அதனை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை.