தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் நெப்போலியன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட ( actor nepolian ) பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதற்கான போதிய நிதி இல்லாமல் நிதி பற்றாக்குறை காரணமாக, பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் கட்டிடப் பணிகள் நிலுவையில் இருந்து வந்தது .
புதிதாக கட்டி வரப்படும் கட்டிடத்தின் பணிகள் முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், புதிய கட்டிடப் பணிகளுக்கான நிதியை நடிகர், நடிகைகள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளார்.
Also Read : மக்களே உஷார் : தமிழ்நாட்டில் மே1 வரை வெப்ப அலை கடுமையாக இருக்கும்..!!
அவரைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் , விஜய் ஆகியோர் புதிய நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகளுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் வழங்கினர் .
இந்த நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.
“தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் நெப்போலியன் நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது” என ( actor nepolian ) நடிகர் சங்கம் சார்பிலும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .