நடுவானில் திடீரென ஏற்பட்ட கோளாறால் ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவுக்கு 225 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவின் க்ராஸ்நாயார்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது .
விமானத்தின் கார்கோ பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் இதில் யாருக்கும் எந்த சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரையிறக்கப்பட்ட அந்த விமான நிலையத்தில் ஏர் இந்தியாவுக்கு ஊழியர்கள் இல்லாததால், வேறு நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய அரசின் உதவியுடன் பயணிகளை மாற்று விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.