அயர்லாந்தில், 62 வயதான ஜாஸ்பர் கிராஸ் என்ற நபர் சேவல் (chicken) தாக்கியதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது செல்லப் பிராணியான சேவலின் (chicken) தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நபரின் மகள் சோகம் இந்த குறித்துப் பேசியுள்ளார்..
67 வயதான ஜாஸ்பர் க்ராஸ், ஓய்வு பெற்ற குதிரை பயிற்சியாளர். ஜாஸ்பர் கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி தனது தோட்டத்திற்கு சென்றபோது அவர் வளர்த்து வந்த சேவல் ஒன்று அவரை பின்னால் இருந்து தாக்கியுள்ளது.
மேலும், அது ஒரு கொடூரமான தாக்குதலாகவும் இருந்துள்ளது. அந்த தாக்குதலின் போது அவர் அதிகப்படியான இரத்தத்தை இழந்ததாகவும் அவரது மகள் ஜோசி கூறியுள்ளார்.
ஜாஸ்பர் க்ராஸை தாக்கிய இந்த குறிப்பிட்ட பறவை ஒரு நல்ல மற்றும் அடக்கமான இனமாக கருதப்படுகிறது. ஆனாலும், எந்த இனமும் ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
மேலும், அவரை தாக்கிய அந்த சேவல் அதன் காலில் உள்ள கூர்முனையான நகங்களால் தாக்கியுள்ளது. இதனால், அவர் மிகவும் அதிகப்படியான இரத்தத்தை இழந்துள்ளார். அது ஒரு ஆபத்தான மாரடைப்பை ஜாஸ்பர் க்ராஷுக்கு ஏற்படுத்தியது என்றும் மருத்துவர்கள் கூயுள்ளனர்.
ஜாஸ்பர், இறக்கும் போது புற்றுநோயால் இறந்த தனது நாயின் கல்லறைக்கு வெளியே சென்று கொண்டிருந்த போது சேவல் தாக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.