நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை மாபுப் பாஷா மறைவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின்(cm mk stalin) இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, வில்லனாக, குணசித்திர நடிகராக என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் நடிகர் நாசர். தற்பொழுது நடிகர் சங்கத் தலைவராகவும் உள்ளார் .இவரது தந்தை மாபுப் பாஷா.செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் வசித்தது வந்தார்.இந்த நிலையில் மாபுப் பாஷா (95) உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார்.
இதனையடுத்து இவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை மாபுப் பாஷா மறைவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
“மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான
திரு. நாசர் அவர்களின் தந்தை திரு. பாஷா அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன்.தந்தையின் மறைவால் வாடும் திரு. நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.