Site icon ITamilTv

England-க்கு எதிரான 2வது டெஸ்ட் – இந்தியா வெற்றி

England

England-க்கு எதிரான 2வது டெஸ்ட் - இந்திய அபார அணி வெற்றி

Spread the love

இங்கிலாந்துக்கு (England) எதிரான 2 ஆவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், இங்கிலாந்தும் (England) தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 112 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 396 ரன்களை எடுத்தது.

இதில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி பும்ராவின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதையும் படிங்க : chile wild fire – 112 பேர் உடல் கருகி பலி! பதற வைக்கும் வீடியோ!

பும்ரா 15.5 ஓவர்கள் வீசி 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விடவும் முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலை பெற்றது.

https://x.com/ITamilTVNews/status/1754402596742152586?s=20

இதை தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ஸ் இன்று நடைபெற்றது.
இதில் 399 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது.

இருப்பினும் 69.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த அவர்களால் 292 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Spread the love
Exit mobile version