திமுக ஆட்சியில் காவல்துறை பாரபட்சமாக செயல்பட்டு வருவதும், சமுதாய ரீதியாக மக்களை அணுகி ( devarkulam ) பொய் வழக்குகள் பதிவதும் கடும் கண்டனத்திற்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்தில் மக்களை சமுதாய ரீதியாக குறிவைத்து பொய் வழக்கு பதியப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒன்பது கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.
விடியா திமுக ஆட்சியில் காவல்துறை பாரபட்சமாக செயல்பட்டு வருவதும், சமுதாய ரீதியாக மக்களை அணுகி பொய் வழக்குகள் பதிவதும் கடும் கண்டனத்திற்குரியது.
Also Read : முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடி – மனோ தங்கராஜ்
“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கோட்பாட்டை சட்டத்தை நிலைநிறுத்தும் பொறுப்பில் உள்ள காவல்துறையினர் உணரவேண்டும்.
தேவர்குளம் பகுதியில் பதிந்துள்ள வழக்குகளின் தன்மையை ஆராய்ந்து, பொய் வழக்குகளை வாபஸ் பெற்று, இனி தமிழ்நாட்டில் எங்கும் சாதிய கண்ணோட்டத்துடன் பொய் வழக்குகள் பதியாவண்ணம் உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு ( devarkulam ) விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன் என ஈபிஎஸ் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.