தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுக்கு காணொளி வாயிலாக பதிலளித்து உரையாடினார் .
இந்நிலையில் இந்த உரையை மேற்கோள் காட்டி தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பா.ரஞ்சித் போட்டுள்ள பதிவில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா?
Also Read : மகாகும்ப புனித நீராடல் – 50 கோடியை கடந்த பக்தர்களின் எண்ணிக்கை..!!
தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி.-க்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.