“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது நான் தான் என கடந்த சில நாட்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்திருந்தார்.
ராஜ்குமாரின் இந்த பதிவு இணையத்தில் செம வைரலாக நிலையில் தமிழக அரசியல் வட்டாரங்கள் மத்தியில் இது பேசும் பொருளாக மாறியது.
இதையடுத்து இதுகுறித்து சீமானிடம் கேள்வி எழுப்பியபோது , “சங்ககிரி ராஜ்குமார் 15 ஆண்டுகளாக எங்கு சென்றிருந்தார்? அந்தப் படம் எடிட் செய்யப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” எனக் எதிர்கேள்வி எழுப்பினார்.
சீமானின் இந்த கேள்விக்கு தற்போது பதில் கொடுத்துள்ள ராஜ்குமார் கூறியதாவது :
சீமான் , என்னிடம் ஆதாரம் கேட்கிறார். அந்தப் புகைப்படமே ஒரு ஆதாரம்தான். ‘அந்தப் புகைப்படத்தை எப்படி எடிட் செய்தார் ராஜ்குமார்? டெமோ காட்ட வேண்டும்’ என்கிறார். ஒரு புகைப்படம் எப்படி எடிட் செய்யப்படுகிறது என்பது குறித்து இணையத்தில் பல வீடியோக்கள் உள்ளன. நான் வேறு அதை தனியாக செய்து காட்டவேண்டுமா
Also Read : மனைவியை கொன்று குக்கரில் வேகவைத்த கணவன் – தெலுங்கானாவில் நடந்த கொடூர சம்பவம்..!!
நான்தான் அந்த புகைப்படத்தை எடிட் செய்தேன் என்பதற்கு செங்கோட்டையன்தான் சாட்சி. சீமானுக்கு மிகவும் நெருக்கமானவர். செங்கோட்டையன் பேசினால் இதற்கான விடை உடனடியாக கிடைக்கும்.
சீமான் அவர்களுடன் கடந்த காலத்தில் நான் ஃபோன் செய்து பேசியபோது ‘சமூகநீதி குறித்துதான் நாம் பேசி வருகிறோம்; அப்போது பெரியாரை அல்லது பெரியார்வாதிகளை தவறுதலாக பேசினால் அது தவறாகிவிடும் என்பதால் பெரியார் குறித்து தவறாக பேச வேண்டாம்’ எனக் கூறினேன். ஆனால் அவர் ஃபோனை கட் செய்து விட்டார். இப்போது நாங்கள் இருவரும் பேசியதை அவர் இஷ்டத்திற்கு எடிட் செய்து சொல்லியுள்ளார்.
நான் பேசியதாக சொல்லும் உரையாடலை சீமான் வெளியிட வேண்டும். சமூக நீதி கருத்து பேசும் சீமான், பெரியாரைப் பற்றி தவறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழகம் வடமாநிலம் போல மாறிவிடும் சூழல் ஏற்பட்டுவிடும் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.