எங்கள் வசம் இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக பறிக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது :
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சீரமைப்பு, மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலமாக விட்டம் பெறப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இணையதள முகவரிக்கு விருப்பமனுவை அளிக்கலாம்.
Also Read : 6000 சாலைகளில் பேட்ச் – நல்ல செய்தி சொன்ன மேயர் பிரியா..!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்படுகிறது. தற்போது, இந்த வழக்கை சிறப்பு குற்றப்புலனாய்வு குழு விசாரிக்கிறது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் செல்போன் கிடைத்துள்ளது. அந்த செல்போனை ஆய்வு செய்தாலே, “யார் அந்த சார்” என்று தெரிந்துவிடும். எந்த சார் ஆக இருந்தாலும் அவர் மாட்டி கொள்வார்.
ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க எங்களிடம் இருந்து பறிக்காது. அது இயற்கையாகவே காங்கிரஸ் தொகுதி தான். கும்பகோணத்தில் தி.மு.க கவுன்சிலருக்கும், காங்கிரஸ் மேயருக்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்து மேயர் சரவணனிடம், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட தலைவர்கள் முன்னிலையில் இன்று விசாரிக்க உள்ளோம் என தெரிவித்தார்.