விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 10ஆம் தேதி நாளை மறுதினம் பலத்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உலகத்து . இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட சுமார் 64 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்புமனுக்கள் மட்டுமே தகுதி பெற்றது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நட்சத்திர தலைவர்கள் பலரும் வந்து தேர்தல் பிரச்சாரங்கள் நடத்தி விக்ரவுண்டு தொகுதி மக்களிடம் தீவிர வாகு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிப்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்க, பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்ட நிலையில் சரியாக மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது.
நாளை மறுதினம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.