மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழகத்தின் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இத மின் கட்டணம் தொடர்பாக வரைமுறை வகுக்கப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும், உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் சூழ்நிலை காரணமாக மின்கட்டண விலை உயர்வு அதிகரித்து இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் .