Site icon ITamilTv

10-வது தேர்ச்சி போதும்..அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு..- முழு விவரம்!

post office

post office

Spread the love

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்கள்:

கார் ஓட்டுநர் பதவிக்கு 27 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்கக்கூடியவராக இருக்க வேண்டும்) தேவை.

இதையும் படிங்க: TN Government Jobs : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ₹1 லட்சம் வரை சம்பளம்..Apply பண்ணுங்க..!

மாத ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபருக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2024

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.05.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Spread the love
Exit mobile version