stealing two wheeler : சாவியுடன் விட்டு சென்றவர்களின் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடும் முன்னாள் அரசு ஊழியர்! – சிக்கியது எப்படி?

ex-government-employee-arrested-for-stealing-two-wheeler
ex government employee arrested for- tealing two wheeler

சென்னையை அடுத்த ஆவடியில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரசு ஊழியரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
இது தொடர்பாக இருசக்கர வாகனங்கள் திருடு போன இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படியிலும் ஆய்வு செய்து, இருசக்கர வாகனங்கள் திருடிய நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் பருத்திப்பட்டு சோதனை சாவடியில் தனிப்படை காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட அவ்வழியாக இருசக்கர வாகனங்கனத்தில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் வேலூர் மாவட்டத்தை சார்ந்த தமிழ்ச்செல்வன் என்றும், கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர் என்பதும் றுதி செய்யப்பட்டது.

ex-government-employee-arrested-for-stealing-two-wheeler
ex government employee arrested for- tealing two wheeler

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சாவியுடன் விட்டு சென்றவர்களின் வாகனங்களை மட்டுமே அந்த நபர் திருடுவது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் தமிழ்ச்செல்வனை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 11 திருட்டு வாகனங்களை பறிமுதல் செய்ததோடு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Total
0
Shares
Related Posts