மாமன்னன் திரைப்படத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் வைகைப்புயல் வடிவேலு பாடல் பாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்ணன் ,பரியேறும் பெருமாள், உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் தற்பொழுது மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக உதயநிதியும் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷியும் நடித்து உள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மாமன்னன் படத்தை தயாரித்து உள்ளது.மேலும் இப்படத்தில் பஹத் பாசில், வடிவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் வரும் ஜூன் மாசம் ரிலீஸ் ஆகப் போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மாமன்னன் படத்துக்கு வைகைப்புயல் வடிவேலு அவருடைய சொந்த குரலில் பாடி இருக்காரு தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்பொழுது ஏ ஆர் ரஹ்மானுடன் வைகைப்புயல் வடிவேலு எடுத்த புகைப்படம் தான் இப்ப சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.