ITamilTv

மனைவியை காணவில்லை என புகாரளித்த கணவர் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி…! நடந்தது என்ன?

Spread the love

காஜியாபாத்தின் போஜ்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஃபசல்கர் கிராமத்தை சேர்ந்த காய்கறி வியாபாரியான தினேஷ் பிரஜாபதி என்பவருக்கு திருமணமாகி சுமார் 13 ஆண்டுகளான நிலையில், மனைவி மற்றும் 6 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஜனவரி 30 ஆம் தேதி, தினேஷ் தனது மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். மேலும் தனது மனைவி அஞ்சு ஜனவரி 26 அன்று காய்கறி சந்தைக்குச் சென்றபோது வீட்டை விட்டு வெளியேறியதாக போலீஸில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து கணவரை கைது செய்த போலீசார், அவரிடம் மேற்கொண்ட கிறுக்குப்பிடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

தனது மனைவிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த அவர், ஜனவரி 25 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் காய்கறி சந்தைக்கு செல்ல எழுந்தபோது, ​​​​அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்து மற்றொரு அறையில் அவரது உடலை மறைத்து வைத்துள்ளார்.

மறுநாள் இரவு, தனது குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த போது, ​​டோங்காவில் உடலை எடுத்துச் சென்று உடலை கிராமத்திற்கு வெளியே உள்ள குளத்தின் அருகே புதைத்துள்ளார். பின்னர் மனைவியை காணவில்லை என நாடகமாடிய அவர், தனது குழந்தைகளிடம், அம்மா பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் நம்ப வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து தினேஷ் பிரஜாபதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜேசிபி உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


Spread the love
Exit mobile version