இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், “இளநிலை உதவியாளர்” மற்றும் “தட்டச்சர்” (typist) காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணிக்கு குறைந்தது 10, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், recruitment.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் (typist) பணிக்கு 19,900 முதல் 63,200 வரை ஊதியமாக வழங்கபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10,+2 வகுப்பு முடித்திருக்க வேண்டும் எனவும், நிமிடத்திற்கு 40 ஆங்கில வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லது நிமிடத்திற்கு 35 இந்தி வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் எனவும், இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 20ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000 எனவும், பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.600 ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 20-04-2023 அன்று 18-27-க்கு கீழ் இருக்க வேண்டும் எனவும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் எனவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெறத் தகுதியுடைவர்களாகவும், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறத் தகுதியுடைவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.