உத்தரப் பிரதேசத்தில், திருட சென்ற இடத்தில் கதவில் (door) தலை மாட்டிக் (stuck) கொண்டதால் திருடன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சாரநாத் பகுதிக்கு அருகே உள்ளது தனியல்பூர் என்ற கிராமம்.
அந்த கிராமத்தில் நசீம் என்ற நபர் தனக்குச் சொந்தமாக விசைத்தறி ஆலை ஒன்றை வைத்துள்ளார். மேலும் , அந்த ஆலையில் போதிய வேலை இல்லாததால் கடந்த இரு நாட்களாக ஆலை மூடப்பட்டு இருந்துள்ளது.
இந்நிலையில், மர்மநபர் ஒருவர் பூட்டியிருந்த ஆலையின் கதவிடுக்கில் தலை மட்டும் சிக்கிய (stuck) நிலையில் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்த நபர் ஜாவித் என்ற திருடன் என்பது தெரியவந்தது. 30 வயதான ஜாவீத் பல திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ள தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், விசைத்தறி ஆலைக்குள் திருடும் நோக்கத்துடன் சென்ற ஜாவீத் கதவு (door) உள்பக்கமாக மேல் தாழ்பாழ் போடப்பட்டிருந்ததை அறியாமல் தலையை உள்ளே விட்டுள்ளார்.
மேலும், கதவின் மேல் பக்கம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் கதவை அதற்கு மேல் திறக்க முடியாமல் போன நிலையில், தலை உள் பக்கமாக சிக்கிக் கொண்டதால் வெளியே எடுக்கவும் முடியாமல் இருந்துள்ளது.
எவ்வளவு முயன்றும் சிக்கிய தலையை வெளியில் எடுக்க முடியாமல் போன நிலையில், கழுத்துப்பகுதியில் இறுக்கம் ஏற்பட்டு ஜாவீத் மூச்சுத் திணறி உயிரிழந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், தலை மட்டும் கதவிடுக்கில் சிக்கி விசைத்தறி ஆலைக்குள் இருக்க, ஜாவித்தின் உடல் கதவுக்கு வெளியில் இருந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.