Site icon itamiltv.com

எங்க டார்கெட் உலக சுற்றுலாத் தலங்கள்.. அழிக்காம விடமாட்டோம்- புயலை கிளப்பிய ஈரான்!

உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா தலங்கள் ஈரானின் தாக்குதல்களுக்கு இலக்கு ஆகும் என்ற அச்சுறுத்தலை அந்நாடு முன்வைத்து வருகிறது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிப்பில் ஈரான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

இதில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி, பாதுகாப்புப் படை செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஈரானும் எதிர் நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான பதிலடி நடவடிக்கைகளை தொடர்கிறது. போர் தொடங்கியது.

பிப்ரவரி 28-ஆம் தேதி முதல், ஈரானின் ஆயுதங்கள், அணுசக்தி, எரிசக்தி வசதிகள் எவ்வளவு சேதமடைந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.

உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் உலகளாவிய இடங்களை பாதுகாப்பாக இருக்காது என்று எச்சரித்துள்ளனர்.

ஈரானின் வான்படையும் கடற்படையும் சிதைந்துவிட்டாலும், பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் திறனை தொடர்ந்து வைத்திருக்கிறது.

ஈரான் போரினை எதிரி முற்றிலுமாக சோர்வடையும் வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளது

Exit mobile version