நேற்று இரவு விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ஜனசதாப்தி ரயில் பணிமனைக்கு திரும்பும் போது ரயிலின் இரண்டு சக்கரகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது (train accident).
முன்னதாக, விஜயவாடாவில் இருந்து நேற்று மதியம் 3:20 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:40 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த ஜனசதாப்தி ரயில் பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதையடுத்து, பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரயில் பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே தடம் புரண்டதாக (train accident) தகவல் வெளியானது.
இதனையடுத்து, இதுகுறித்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் 2 மணிநேர நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ரயில் சக்கரங்களை சீரமைத்து சீரான நிலைக்கு கொண்டு வந்தனர்.
அதன்பிறகு, மீண்டும் தற்போது ஜனசதாப்தி ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவிற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.