கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா பல ஆண்டுகளுக்கு பின், பலத்த பாதுகாப்புடன் பாரம்பரிய உற்சாகத்துடன் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற கட்சி தீவு அந்தோனியார் வருடாந்திர பெரும் திருவிழாவை முன்னிட்டு இந்தியா இலங்கை நாடுகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து படகுகள் மூலம் கச்சத்தீவை நோக்கிச் சென்றனர்.
அதேபோல தமிழக மக்களும் கச்சதீவை நோக்கிச் சென்றனர். மேலும் அங்குள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் குடியேற்றத்துடன் மார்ச் மூன்றாம் தேதி தொடங்கியது. இலங்கை இந்தியப் பங்குத் தந்தைகள் மற்றும் ஆயர்கள் தலைமையில் கொடியேற்ற விழா தொடங்கியது.
இந்த திருவிழாவில் தமிழகத்திலிருந்து 2103 பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் திரு ஜெபமாலை, திரு சிலுவை, பாதை, தியானம், நற்கருணை ,ஆராதனை ஆகியோரின் அடிப்படையில் மார்ச் மூன்றாம் தேதி இரவு மின் அலங்காரத்துடன் கூடிய அலங்கார தேரில் அந்தோணியார் ஊர்வலம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து திருவிழாவில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மார்ச் 4ஆம் தேதி சிங்கள மொழியில் நடந்த கூட்டுப் பிரார்த்தனையில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் இணைந்து பிரார்த்தனை செய்தன.
மேலும் தமிழ் மற்றும் இலங்கை மீனவர்களுக்காக வழிபாடுகளுடன் கூடிய நடந்த கூட்டுப் பிரார்த்தனையில் இந்தியா மற்றும் இலங்கையில் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் இருநாட்டு மீனவர்களின் அளவிற்காகவும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
மேலும் இரண்டு நாள் திருவிழா நிறைவு அடைந்ததை தொடர்ந்து கொடி இறக்கம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை சேர்ந்த பக்தர்கள் பாதுக்கப்பாக படகுகள் மூலம் அனுப்பி வைக்கபட்டனர்.
இதனை தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறிலங்கா கடற்படையின் உயிர்காக்கும் குழுக்கள், மற்றும் மருத்துவ குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடதக்கது.