CROPS கருவி மூலம் இஸ்ரோவால் விண்வெளிக்கு அனுப்பட்ட காராமணி பயறு விதைகளில் இருந்து முதல் ‘இலைகள்’ வெளிவந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
விண்வெளியில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அனுப்பப்பட்ட CROPS கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு விதைகள் முளைக்கத் தொடங்கிய நிலையில், அதில் இருந்து முதல் ‘இலைகள்’ வெளிவந்துள்ளன.
கடந்த டிசம்பர் 30-ம் தேதி PSLV-C60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட CROPS கருவியில் காராமணி பயறு விதைகள் வைத்து அனுப்பப்பட்டன.
இதையடுத்து இந்த பயிர்கள் முறைப்படி வளர்கிறதா என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்த கண்காணித்து வந்தனர் இந்நிலையில் குறித்த நேரத்திற்குள் பயிர்கள் துளிர்விட்டு இலைகள் வெளிவந்துள்ளது.
இதன்மூலம் இஸ்ரோவின் CROPS (Compact Research Module for Orbital Plant Studies) சோதனை நினைந்த படி வெற்றியடைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.