சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார் அளித்து இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் ஃபனிந்த ரெட்டி ஆகிய 3பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெருவித்து இருந்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குனர் முதல்வர் மீது புகார் என்றதும், இயக்குனர் என்னை சந்திக்க மறுத்துவிட்டதாகவும், அதன்பின் லஞ்ச ஒழிப்பு துறையின் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என குற்றம் சாட்டினர் இருந்தார்.
- மேலும் கள்ளக்குறிச்சி மாணவி செல்போன் தற்பொழுது ஒப்படைத்தது ஏன் ?
- இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அண்ணாமலை விமானத்தில் அவசரகால கதவை திறந்த விவகாரம்?
- தமிழக சட்டசபையில் நடைபெற்ற கூட்டதொடரில் ஆளுநர் உரையை திமுக புறக்கணித்தது குறித்து முதலமைச்சர் நிலை என்ன ?
- மேலும் பள்ளி மாணவி வழக்கில் பள்ளி நிர்வாகம் 4 கோடி பாதிக்கபட்டு உள்ளதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நமது i tamil News வலைதளத்திற்கு யூடியூபர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அதை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம்