”9 உலக நாடுகளில் அமைக்கப்படும் முருகன் கோயில்கள்..”சற்குரு ஸ்ரீ சரவண பாபா அறிவிப்பு!!

இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் 9 மாபெரும் முருகன் கோயில்களை நிறுவபடும் என சற்குரு ஸ்ரீ சரவண பாபா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர் பூர்வீக பகுதிகளில், தொடர்ந்தும் சிங்கள குடியேற்றம், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள பூர்வீக தமிழ் நிலங்களில்3 உட்பட உலகில் 9 பெரிய முருகன் கோவில்களை நிறுவ, லண்டனைச் சேர்ந்த சற்குரு ஸ்ரீ சரவண பாபா சுமாமி முடிவெடுத்துள்ளார்.

தமிழ் கடவுளான முருகனின் நாமத்தை உலகமெல்லாம் பரப்ப, திடசங்கல்பம் பூண்டுள்ளதாக அவர் கூறுகிறார்.அதுமட்டுமல்லாது, கனடாவில் மிகப்பெரிய அளவில் நிலத்தை வாங்கி, அங்கும் எம்பெருமான முருகனின் கோவில் ஒன்றை கட்ட ஆரம்ப வேலைகள் நடந்து வருகின்றன.

லண்டன் மாநகரில் மிகப் பெரிய ஆலயத்தை புணரமைத்துக் கட்டியுள்ளனர். இதேபோல், சுவிஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில், ஈழத் தமிழர்களோடு இணைந்து கோவில்களை கட்டும் பணியில், சற்குரு ஸ்ரீ சரவண பாபா சுவாமி ஈடுபட்டு வருகிறார்.

கனடாவில் ஞான வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த ஆண்டு தொடக்கத்தில் நிகழ்ந்தது.

Total
0
Shares
Related Posts