இத்தாலியில், இசைக்கலைஞர் ஒருவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது அவர் ஹாயாக படுத்துக்கொண்டு சாக்ஸோஃபோன் (saxophone) வாசித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட, 9 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை, ரோமில் உள்ள பீடியா சர்வதேச மருத்துவமனையில் நடைபெற்றது.
மேலும், அறுவை சிகிச்சையின் போது நோயாளி இசைக்கருவியை வாசித்ததால் நோயாளியின் மூளையை மிகவும் எளிதாக எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது, என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட 35 வயதான இந்த நோயாளி அறுவை சிகிச்சைக்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சாக்ஸஃபோன் (saxophone) வாசித்திருக்கிறார்.
மேலும், அவருக்குச் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர் நலமாக வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர். கிறிஸ்டியன் ப்ரோக்னா, அந்த நோயாளிக்கு மூளையிலிருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்த அறுவை சிகிச்சையின் போது, நோயாளி சாக்ஸஃபோன் வாசித்ததால் அவருக்குப் பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.
மூளையிலிருந்து கட்டியை அகற்றுவதற்காக அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி பத்து உயர் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் கொண்ட குழு போராடியது.
நோயாளியின் மூளையில் இந்தக் கட்டிகள் கண்டறியப்பட்ட பகுதிகள் மனித மூளையில் மிகவும் சிக்கலான இடங்கள். மரத்துப் போகச்செய்யும் அனஸ்தீஸியா கொடுக்கப்பட்டு இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.
நோயாளி தனது சாக்ஸோபோன் வாசிப்பை இத்தாலியத் தேசிய கீதத்துடன் தொடங்கினார், பின்னர் 1970 ஆம் ஆண்டு “‘லவ் ஸ்டோரி” திரைப்படத்தின் தீம் பாடலை வாசித்தார் என்று மருத்துவர் கூறினார்.
இத்தாலியத் தேசிய கீதமும் 1970 ஆம் ஆண்டு வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் தீம் பாடலும் ஒன்பது மணி நேர அறுவை சிகிச்சை முழுவதும் ஒலித்தன.
மேலும், மருத்துவர் ப்ரோக்னா, “நோயாளியின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் அமைந்துள்ள “கேவர்னோமாக்கள்” போன்ற மூளைக் கட்டி அல்லது “வாஸ்குலர்” குறைபாடுகளை அகற்றுவதே விழித்திருக்கும் அறுவை சிகிச்சையின் குறிக்கோள்.
அவர், விழித்திருந்தால் தான் அதனைச் செய்யமுடியும். நோயாளி அறுவை சிகிச்சையின் போது பயத்தை விட அமைதியைத்தான் உணர்ந்தார் எனவும் மருத்துவர் கூறியுள்ளார்.
நோயாளி தொடர்ந்து இசையை இசைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை மருத்துவ ஊழியர்களிடம் தெரிவித்தார்.
அதேசமயம், நோயாளி சாக்ஸபோன் வாசித்ததனால் அறுவை சிகிச்சை நிபுணருக்கும் இது பயனுள்ளதாக இருந்தது.
ஏனெனில், இது பல்வேறு மூளை செயல்முறைகளை மருத்துவர்களுக்கு எளிதாக்கிக் காண்பித்தது, மூளை வரைபடத்தைப் புரிந்துகொள்ள எளிதாக இருந்தது என்று கூறுகிறார்.
மேலும், மருத்துவர் ப்ரோக்னா, மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.
இதுபற்றி, அறுவை சிகிச்சை முடிந்த நோயாளி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.
Beautiful: Listen to man playing his saxophone as he is having his brain operated on. #neurosurgery #music #saxophone pic.twitter.com/ge0nhEQAEd
— Oren Gottfried, MD (@OGdukeneurosurg) October 15, 2022