எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையின் இந்த தொடர் அச்சுறுத்தலால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்படுவதாக தமிழக மீனவர்கள் அழுகாத குறையாக வருத்தம் தெரிவிக்கின்றனர் .
இந்நிலையக்ள் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர்.
இதையடுத்து கைதான 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.