ஹனிமூன் சென்றபோது புதுமணத் தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாக, தேனிலவுப் பயணம் சிலருக்குக் கனவாகவே மாறிவிடுகிறது. அந்த வகையில் தேனிலவு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
சேலம் மாவட்டத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் லோகேஷ்வரன். இவர் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த மருத்துவர் விபூஷ்னியா என்பவரை பல வருட காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் பெற்ற அவர்களுக்கு, சேலத்தில் கடந்த ஜூன் 1ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
சமீப காலமாகவே இந்தோனேசியா, மாலத்தீவு, பாலி போன்ற தீவுகளுக்கு ஹனிமூன் செல்வது டிரென்டாக உள்ள நிலையில், புதுமண தம்பதிகள் ஹனிமூன் செல்லாம் என முடிவு செய்தனர். அதன்படி பாலித்தீவை அடைந்த ஜோடி அங்கு சுற்றிப் பார்த்ததுடன் விரைவு மோட்டார் படகில் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் புதுமணத் தம்பதி கடலில் மூழ்கி உயிரிழந்தனர். திருமணமான ஒரு வாரத்தில் புதுமண தம்பதியினர் விபத்தில் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.