பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மார்ச் மாதம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் தேர்வு எழுதிய 7,60,606 பேரில், 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட அளவில் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிததத்தில் திருப்பூர் மாவட்டம் 97.45 சதவீதம்பெற்று முதலிடத்தில் உள்ளது.
97.42 சதவீத தேர்ச்சியினைப் பெற்று சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் அடுத்த இடத்தில் உள்ளது.

அரியலூர் மாவட்டம் 97.25 சதவீத தேர்ச்சியினை பெற்றுள்ளது. திருவண்ணாமலை 90.47 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
மற்ற மாவட்டங்கள் பெற்றுள்ள தேர்ச்சி விகிதம் வருமாறு:
கன்னியாகுமரி – 95.72%
திருநெல்வேலி – 96.44%
தென்காசி – 96.07%
தூத்துக்குடி – 96.39%
ராமநாதபுரம் – 94.89%
விருதுநகர் – 96.64%
தேனி – 94.65%
மதுரை – 95.19%
திண்டுக்கல் – 95.40%
ஊட்டி – 94.27%
கோயம்புத்தூர் – 96.97%
சேலம் – 94.60%
நாமக்கல் – 96.10%
கிருஷ்ணகிரி – 91.87%
தர்மபுரி – 93.555
புதுக்கோட்டை – 93.79%
கரூர் – 95.90%
பெரம்பலூர் – 96.44%
திருச்சி – 95.74%
நாகப்பட்டினம் – 91.19%
மயிலாடுதுறை – 92.38%
திருவாரூர் – 93.08%
தஞ்சாவூர் – 93.46%
விழுப்புரம் – 93.17%
கள்ளக்குறிச்சி – 92.91%
கடலூர் – 94.36%
வேலூர் – 92.53%
திருப்பத்தூர் – 92.34%
ராணிப்பேட்டை – 92.28%
காஞ்சிபுரம் – 92.28%
செங்கல்பட்டு – 94.71%
திருவள்ளூர் – 91.32%
சென்னை – 94.48%