ITamilTv

பாடகி சுசித்ரா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. -பாஜக மைய புள்ளி பரபரப்பு தகவல்!

singer suchitra interviewசுசித்ராதனுஷ்திரிஷா

Spread the love

தமிழ் திரைப்பட உலகில் (Kollywood) போதை பொருள் என்பது சகஜமாக உள்ளது என்றும் கூறியிருப்பது தமிழகம் மற்றும் திரை உலகம் திசை மாறி செல்கிறது என்பதை உணர்த்துவதாக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது: சுச்சி லீக்ஸ் அப்படின்னு வெளிவந்த எல்லா போட்டோஸ்மே ஒரு பிராங்க். என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா இன்னும் சிலர் இவங்க எல்லாரும் ஒரு கேங்.

இவங்க எல்லாம் சேர்ந்து எனக்கு பிராங்க் பண்ணிட்டாங்க. என்னுடைய twitter பாஸ்வேர்டை என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் வாங்கி எனக்கு இந்த மாதிரி ஒரு பிராங்க் பண்ணிட்டாங்க.

அவங்களே அவங்களுடைய போட்டோஸ சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் என்னுடைய twitter பக்கத்தில் போட்டுட்டு அதன் பிறகு அவங்களே நாங்க சுசித்ராவ மன்னிச்சிட்டோம். நாங்க அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டோம் அப்படின்னு சொல்றாங்க.

என்ன எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கிட்டாங்கன்னு கடவுள் பாத்துட்டு தான் இருக்காரு. கடவுள் அவங்க யாரையும் சும்மா விட மாட்டார். நான் கடவுள் கிட்ட சொல்லி அழுதுட்டு தான் இருக்கேன்.

அதுக்கேத்த மாதிரி கடவுளும் அவங்களுக்கு தண்டனைகளை கொடுத்துட்டு தான் இருக்காரு. அது மட்டும் இல்லாம பயில்வான் ரங்கநாதன் குறைந்தது ஆறு மாசத்துக்கு ஒரு முறையாவது என்னுடைய பேர அவருடைய வீடியோக்கள்ல சொல்லிட்டு இருக்காரு.

இதையும் படிங்க: “என் கேரியரையே நாசம் பண்ணிட்டான் தனுஷ்.. திரிஷாவும் உடந்தை.. இவங்க எல்லாரும் ஒரு கேங்” – சுசித்ரா!

இது ரொம்பவே எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துது. அவருக்கு கார்த்திக் குமாரும், தனுஷும் பணம் கொடுத்து தான் பேச வைக்கிறாங்க. பயில்வான் ரங்கநாதன நேரில் பார்த்தா சுட்டு கொன்னுடுவேன். இல்ல கத்தியால குத்தி கொலை பண்ணிடுவேன்.

தனுஷ் ஒரு பூமரு.. மெச்சூரிட்டியே கிடையாது அவனுக்கு.. ஆனா, அவன் ஒரு நல்ல அப்பா.. ஆனா ஐஸ்வர்யாராய் ஒரு மோசமான அம்மா.

எனக்கு தனுஷ் ஜென்ம எதிரி கிடையாது. அவன் எனக்கு பிராங்க் பண்ணி இருக்கான். அத நான் அப்புறமா கவனிச்சுக்கிறேன். அவன் கை கால உடைச்சிட்டு ஜெயிலுக்கு போக கூட நான் தயாராக இருக்கிறேன்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னவோ விவாகரத்துக்கு அப்புறம்தான் அவங்களுக்கு ஃப்ரீடம் கிடைத்த மாதிரி படம் டைரக்ட் பண்ணுவாங்களாம், டான்ஸ் ஆடுவாங்களாம், நடிப்பாங்களாம்..

ஏன் இதுவரைக்கும் அவங்களுடைய திறமைகளை வெளி காட்ட விடாம தனுஷ் தான் அவர்களை அடக்கி வைத்திருந்தாரா இப்படி அடுக்கடுக்கான கேள்விகளையும் பகிர் தகவல்களையும் கொட்டி தீர்த்து இருக்கிறார் சுசித்ரா.

இது குறித்து பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர், நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தும் கேளிக்கை விருந்துகளில் வெள்ளித் தாம்பாளத்தில் போதை பொருளான Cocaine (கொகைன்) அளிக்கப்படுகிறது என்று சர்வ சாதாரணமாக கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் அவருடைய முன்னாள் கணவர் Cocaine எடுத்து கொள்கிறார் என்றும் தமிழ் திரைப்பட உலகில் (Kollywood) போதை பொருள் என்பது சகஜமாக உள்ளது என்றும் கூறியிருப்பது தமிழகம் மற்றும் திரை உலகம் திசை மாறி செல்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஒரு நேர்காணலில் பெண் போலீசார் குறித்து பேசியதற்கு பேட்டி அளித்தவரையும், பேட்டி எடுத்தவரையும் கைது செய்த தமிழக காவல்துறை, இந்த நேர்காணலில் சுசித்ரா போதை பொருள் குறித்து பேசிய விஷயங்களை அலட்சியப்படுத்தாமல் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர் குறிப்பிட்டவைகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர் கூறியதில் அடிப்படை ஆதாரமிருந்தால், கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் மிகச்சிறந்த நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச முன்வர வேண்டும். சுசித்ரா கூறியதில் உண்மையில்லையெனில், மறுப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் மீது புகார் அளித்து வழக்கு தொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version