பாடலாசிரியர் சினேகன் மீது தமிழ் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வருவதாக பாடலாசிரியர் சினேகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
சிநேகம் அறக்கட்டளை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பாடலாசிரியர் கூறிய குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்தப் புகார் வந்துள்ளது.பிரபல பாடலாசிரியர் தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, முன்னாள் பிக் பாஸ் தமிழ் போட்டியாளரான சினேகன், ஜெயலட்சுமிக்கு எதிராக புகார் அளித்தார், அவர் 2015 இல் தொடங்கியதாகக் கூறும் சிநேகம் அறக்கட்டளையின் அதே பெயரைக் கொண்ட ஒரு அறக்கட்டளையை நடத்தி வருவதாகக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்,அவரது அறக்கட்டளை பெயரில் நிதி மற்றும் அவரது படத்தை சிதைப்பது. மேலும் இணையதளத்தில் உள்ள முகவரி தவறாக இருப்பதாகவும், தொலைபேசி எண்களில் ஒன்று வேலை செய்யவில்லை என்றும் சிநேகன் கூறினார்.
மேலும் சினேகன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும், ஜெயலட்சுமி பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி விளம்பரம் தேடி வரும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகையும் பா.ஜ.க நிர்வாகியுமான ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சினேகன் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 19ஆம் தேதி திருமங்கலம் போலீசார் பாடலாசிரியர் சினேகன் மீது ஆபாசமாக பேசுதல், பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில்நடிகை ஜெயலட்சுமி மீது பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மோசடி மற்றும் ஆவணங்கள் மோசடி என இரண்டு பிரிவின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் திரைத்துறையை சேர்ந்த இரண்டு நபர்கள் ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை ஜெயலட்சுமி‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரபல நடிகை ஜெயலட்சுமி, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘வேட்டைக்காரன்’, ‘அப்பா’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.