தமிழ்நாடு வந்த சேகுவாராவின் மகள் அலேய்டா குவாரா:
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் அலேய்டா குவாரா தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார் .மேலும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னை வந்த சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவுக்கு விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.
வருகைக்கான விளக்கம் :
கியூபப் புரட்சியாளரும், உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகராக திகழும் தோழர் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவும், பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேராவும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 2023 ஜனவரி 17 அன்று சென்னை வரும் அவர்களுக்கு விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் அளிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் கேரள அமைச்சருமான எம்.ஏ.பேபி, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி ,வைகோ, உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மற்றும் இடதுசாரி இயக்க தலைவர்கள் கலந்து கொண்டனர்