திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை மக்களே.. நமக்கு நாமே பாதுகாப்பு என்று எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) கூறியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது
“கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:
●செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்.
●புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை.
●தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.
●தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.
இனி இந்த திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்துவதில் எந்த பயனும் இல்லை.
இதையும் படிங்க : காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்திடுக – அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு! என பதிவிட்டுள்ளார் Edappadi Palaniswami.