அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெலலிதா படங்கள் இல்லாதது குறித்து பலரும் பல விதமாக பேசி வரும் நிலையில் இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதிமுகவில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பொது இடத்தில் பேசவில்லை. அவர் வேறு இடத்தில் நடந்த உள்ளரங்க நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
Also Read : பொய்யான மாப்பிள்ளையை காட்டி 14 கோடி அபேஸ் – நீதிமன்றம் கொடுத்த கடும் தண்டனை..!!
அத்திக்கடவு-அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்த பாராட்டு விழா விவசாயக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. அது அதிமுக நிகழ்ச்சி அல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெலலிதா படங்கள் இல்லை என கூறி எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.