சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் நாட்டில் முக்கியமான காய்கறி சந்தைகளில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை முக்கியமானது. இந்த சந்தைகளில் இருந்து போரூர், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளில் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டுவரப்படும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதன் படி இன்றைய காய்கறிகளின் விலை விளவரங்கள் குறித்து பார்க்கலாம்.
அந்த வகையில் இஞ்சி ஒரு கிலோ 110 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்காய் 80 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 30 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கொத்தவரை ஒரு கிலோ 25க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முள்ளங்கி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து காணபடுகிறது. அந்த வகையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் பெரிய வெங்காயம் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.