Site icon ITamilTv

இஸ்ரேலிய பெண்ணின் அரை நிர்வாண சடலத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பாலஸ்தீன போராளிகள் – கொடுமையின் உச்சம்!!

Spread the love

பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இஸ்ரேலுக்குள் பல ஆண்டுகளாக ஊடுருவி தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில், தற்போது இஸ்ரேல் நாட்டை நோக்கி நடத்தியுள்ள திடீர் ராக்கெட் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போரில், பாலஸ்தீன் படைகள் அரங்கேற்றிய ஒரு கொடூர சம்பவம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோ காட்சியில், ஹமாஸ்-பாலஸ்தீனிய போராளிகள் அரை நிர்வாணமாக கைகளும் கால்களும் உடைந்த நிலையில் உள்ள ஒரு பெண்ணின் உடலை, ஒரு ட்ரக்கின் பின்புறம் ஏற்றிக்கொண்டு, நகரத்தில் அணிவகுத்துச் செல்லும் கொடூரமான காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேலும், அந்த வீடியோவில் சிலர் இறந்த அந்த பெண்ணின் உடலின் மீது எச்சில் துப்புவதையும், அந்த இறந்த பெண்ணின் உடலை அரைவதையும் பார்க்க முடிகின்றது. இது உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நெஞ்சை உலுக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அங்கு இறந்த பொதுமக்களின் உடல்களை டிரக்களில் நகரம் முழுவதும் ஊர்வலாமாக எடுத்து செல்வதாகவும், இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 35 இஸ்ரேல் நாட்டு படையினர் பிணைய கைதிகளாக பாலஸ்தீனிய போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை எத்தனை பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. ஆனாலும், இந்த தாக்குதலை பார்க்கும் பொழுது சுமார் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும், இதுவரை இல்லாத அளவில் இந்த தாக்குதலை ஹமாஸ் பாலஸ்தீனிய போராளிகள் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version