6000 சாலைகளில் பேட்ச் நடைபெற்று வருவதாகவும் இனி பள்ளமே இருக்காது எனவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா கூறியதாவது :
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறோம், வீடு வீடாக சென்ற மக்களின் கோரிக்கைகளை கேட்டு வருகிறோம், சாலைகளில் குப்பைகள் உள்ளது, சாலை அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்துள்ளனர், அவர்களது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
Also Read : உண்மையில் சார் இருக்கிறார் – உறுதியாக கூறும் பாதிக்கப்பட்ட மாணவி..!!
மழையால் நவம்பர் டிசம்பர் மாதத்தில் சாலை போடும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. ஜனவரி மாதம் தொடங்கியுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் சாலை போடும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.
5 ஆயிரம் முதல் 6000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டிய சூழல் உள்ளது, 3 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, மீதமுள்ள பணிகளும் வரும் காலங்களில் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.