அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் , மாணவகர்கள் , திரைபிரபலங்கள் என பலரும் கடும் கண்டன்ம தெரிவித்து வருகின்றனர். சில அரசியல் கட்சிகள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
Also Read : மீண்டும் FIDE தொடரில் மேக்னஸ் கார்ல்சன் – பேட்டியில் கொடுத்த ட்விஸ்ட்..!!
இந்நிலையில் தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.