மதுரை மாவட்டம், மேலுார் அருகே புலிப்பட்டியில் உள்ள புலி மலையில், 2,100 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் வரைந்த சிவப்பு பாறை ஓவியங்களை (Red rock paintings), தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
புலி மலை பாறையில் மனித உருவங்கள், விலங்குகள், குறியீடுகள் என, 100க்கும் மேற்பட்ட சிகப்பு நிற ஓவியங்கள் காணப்படுகின்றன.
இது, கற்காலத்தை சேர்ந்தவை என, கருதப்படுகிறது. மதுரையில் ஆறு இடங்களில் இதுபோன்ற ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, சிவப்பு பாறை ஓவியங்களை 5,000 ஆண்டுகள் பழமையானவை என கருதப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புலி மலை சிவப்பு பாறை ஓவியங்கள் (Red rock paintings), 2,100 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சிவப்பு பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.