அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் (judicial custody extended) செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை உயர்நீதிமன்றம் 32 ஆவது முறையாக நீடித்து தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது .
சிறையில் அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படுவதால் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டது .
Also Read : https://itamiltv.com/tn-chief-ministers-idea-that-aiadmk-will-break-up-never-materializes-eps/
இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், சிறையில் இருந்தபடியே காணொளி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் .
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 32வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையே ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் (judicial custody extended) பல முறை மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது அவரது உடல் நிலையை மேலும் பலவீன படுத்தும் என்றும் அவரது குடும்பத்தார்கள் கவலை தெரிவித்துள்ளனர்.