நெடுஞ்சாலை துறைக்கென தனி ஆணையம் தொடர்பான அறிவிப்பை ஓரிரு நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார் .
சென்னை கிண்டியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு
கூறியதாவது :
தமிழ்நாட்டில் பல துறைகள் அரசில் இருந்தாலும், முதல்வரது நெஞ்சுக்கு நெருக்கமாக இருப்பது நெடுஞ்சாலைத் துறை.
Also Read : தவெக தொண்டர் சாலை விபத்தில் உயிரிழப்பு..!!
சாலை மற்றும் பாலம் கட்டுமானதிற்கு நிலையான விவர குறிப்பு தமிழகத்தில் தான் எழுதபட்டது . அதுவே இன்று இந்திய அளவில் வழிகாட்டியாக உள்ளது . மருத்துவர்கள், ஓய்வின்றி பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்றால் அந்த நாட்டில் நோய் அதிகம் உள்ளது என பொருள். ஆனால் பொறியாளர்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அந்த நாடு, வளர்ச்சி பாதையில் உள்ளது என பொருள்.
நெடுஞ்சாலை துறைக்கு தனி ஆணையம் அமைக்கபடும் என்கிற அறிவிப்பை சட்டமன்றத்தில் அறிவித்தோம். இன்னும் ஒரு சில தினங்களில் அதற்கான ஆணையை தமிழக முதலமைச்சர் வெளியிட உள்ளார் என தெரிவித்தார்.