நாட்டை உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் காதலி மற்றும் அவரது மாமன் குற்றவாளிகள் என நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் ஷாரோன் ராஜ்(23). பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கீரிஷ்மா என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கீரிஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வீட்டுக்குத் தெரியாமல் அவர் ஷாரோன் ராஜை காதலித்து வந்துள்ளார் . இருவரும் வெட்டுக்காடு சர்ச்சில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நாள் ஷாரோனை தனது வீட்டிற்கு அழைத்த கீரிஷ்மா, அவருக்கு ஜூஸ் குடிக்க கொடுத்துள்ளார் . பின்னர் நண்பருடன் சென்றுகொண்டிருந்த போது ஷாரோன் ராஜ் வாந்தி எடுத்திருக்கிறார்.
Also Read : பிரபல ரவுடி பாம் சரவணனுக்கு நீதிமன்ற காவல்..!!
இதுகுறித்து அவர் நண்பர் கேட்டதற்கு, கீரிஷ்மா கொடுத்த ஜூஸ் குடித்தது ஒத்துக்கொள்ளவில்லை எனக் கூறியிருக்கிறார் . பின்னர் வீட்டிற்குச் சென்றதும் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, பாறசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிகிச்சையில் இருந்த போதே ஷாரோன் ராஜின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்த நிலையில் அவர் ஆசிட் போன்ற விஷம் குடித்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஷாரோன் ராஜின் தந்தை புகார் அளித்ததன்பேரில், க்ரீஷ்மாவிடம் நடத்திய விசாரணையில் களைக்கொல்லி பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்து ஷாரோன் ராஜுக்குக் கொடுத்ததாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கன்னியாகுமரி அருகே கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் காதலி கிரீஷ்மா குற்றவாளி என கேரளாவில் உள்ள நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.