நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை கடந்த சில நாட்களுக்கு ( TN – SL ) ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு முதல் பயணமும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது .
தொடக்க நாளை ஒட்டி ஒருநாள் மட்டும் கட்டணம் ₹3000 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு 35 பயணிகள் இலங்கை சென்றடைந்தனர்.
இந்நிலையில் வெகு விமர்சையாக தொடங்கப்பட்ட நாகை – இலங்கை இடையேயான சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது .
Also Read : மத்தியப் பிரதேசம் அரசுப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் FAIL..!!!
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது .
இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13ம் தேதி இலங்கைக்கு செல்ல ( TN – SL ) உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.