ITamilTv

KGF நடிகர் யாஷ் தவறாக நடந்தாரா? ஸ்ரீநிதி ஷெட்டி..!

Spread the love

KGF படப்பிடிப்பின் போது யாஷ் (yash) தன்னை துன்புறுத்தியதாக பரவும் தகவல் வதந்தி என்று நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கே.ஜி.எப். படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜோடியாக நடித்த பிரபல நடிகர் யாஷ் (yash) மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகிய இருவரும் இந்திய அளவில் பிரபலமானார்கள்.

மேலும், இந்த படங்களின் மூலம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிக்கு அனைத்து மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நடிகர் யாஷ்க்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமே சேர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, தமிழில் நடிகர் விக்ரமுடன் கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருந்தார்.

இந்த நிலையில், கே.ஜி.எப். படப்பிடிப்பில் ஸ்ரீநிதி ஷெட்டியை யாஷ் துன்புறுத்தி தொல்லை தாககொடுத்தவும், தவறாக நடந்ததாகவும் வாதிகள் பரவின. இதனால், அவரோடு இனிமேல் சேர்ந்து நடிப்பது இல்லை என்று ஸ்ரீநிதி ஷெட்டி முடிவு செய்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

yash

அவர் கூறும்போது, “சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்புகின்றனர். யாஷ் ஒரு சிறந்த மனிதர். அவர் எப்போதும் எனக்கு தொந்தரவு கொடுத்ததே இல்லை. படப்பிடிப்பில் யாஷ் உடன் நடிக்கும்போது எனக்கு எந்த அசவுகரியங்களும் ஏற்படவில்லை. மேலும், யாஷ் ஒரு ஜென்டில்மேன்”.

“யாஷ் உடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாகவே எனக்கு இருந்தது. மேலும், நான் எப்போதும் யாஷ் ரசிகையாகவே இருப்பேன்” என்று கூறி விளக்கம் அளித்துள்ளார்.

 

 

 


Spread the love
Exit mobile version